ஞாயிறு, 26 ஜூலை, 2015

சுண்டைக்காய் மருத்துவம்!





சுண்டைக்காய் மருத்துவம்!

கிருமிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு 
நிகரே இல்லை எனலாம். உணவின் மூலம் நம் 
உடலுக்குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக 
உள்ளே பலவித பாதிப்புகளை உருவாக்கலாம். 
அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு 
இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது 
தவிர்க்கப்படும். சுண்டைக்காயை உலர்த்திப் 
பொடியாக்கி, தினம் சிறிதளவை தண்ணீரில் 
கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய் 
தொற்றும், அதன் விளைவால் உண்டாகிற 
அரிப்பும் குணமாகும். வாரத்தில் 4 நாட்களுக்கு 
சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு ரத்த 
சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்குமாம்.

சுண்டைக்காயைக் காய வைத்து வற்றலாக்கி, 
சில துளிகள் எண்ணெய் விட்டு வறுத்து, சூடான 
சாதத்தில் பொடித்துச் சேர்த்து ஒரு கவளம் 
சாப்பிட, அஜீரணக் கோளாறுகள் குணமாகும். 
வாயுப்பிடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கும் 
சுண்டைக்காய் நல்ல மருந்து. பச்சை 
சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் 
மூலம் எலும்புகள் பலப்படும் என்பது பெண்கள் 
கவனிக்க வேண்டிய சேதி. பக்கவாதம் 
பாதித்தவர்களுக்குக் கூட சுண்டைக்காய் 
மெல்ல மெல்ல நிவாரணம் தரும் என்கிறது 
பாட்டி வைத்தியக் குறிப்பு ஒன்று.

எப்படி சுத்தப்படுத்துவது?

காம்புடன் கூடிய பச்சை சுண்டைக்காய்களாகப் 
பார்த்து வாங்க வேண்டும். காம்பு நீக்கி, 
சுண்டைக்காய்களை லேசாகத் தட்டி, தண்ணீர் 
உள்ள பாத்திரத்தில் போட வேண்டும். பிறகு 
கைகளால் லேசாக அவற்றை அலசினால், 
விதைகள் அடியில் தங்கும். விதைகளை 
முழுக்க நீக்கத் தேவையில்லை. பிறகு 
இன்னொரு முறை காய்களைக் கழுவிவிட்டு, 
சமையலுக்கு உபயோகிக்கலாம்.

உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து, 
கொழுப்பைக் கரைப்பது வரை பெரிய பெரிய 
வேலைகளைச் செய்யக் கூடிய மாபெரும் 
மருத்துவக் குணங்களை உள்ளடக்கியது 
சின்னதான இந்த சுண்டைக்காய். இத்தனை 
சிறிய சுண்டைக்காயினுள் இவ்வளவு 
விஷயங்களா என மலைக்க வைக்கிறது, 
ஊட்டச்சத்து நிபுணரான ஹேமமாலினி 
சொல்கிற தகவல்கள்...

* நமது வீட்டுத் தோட்டங்களில் மிகச் 
சுலபமாகவும் சீக்கிரமாகவும் விளையக்கூடிய 
ஒரு தாவரம் சுண்டைச்செடி. மகத்தான 
மருத்துவக் குணங்கள் கொண்ட 
சுண்டைக்காயின் உபயோகம் மெல்ல மெல்ல 
குறைந்து வருகிறது. சுண்டைக்காயை நுண் 
ஊட்டச் சத்துகளின் பவர் ஹவுஸ் என்றே 
சொல்லலாம். தேவையற்ற செல் பாதிப்புகள் நம் 
உடலில் ஏகப்பட்டவியாதிகளை வரவழைத்து 
விடும். நீரிழிவு, இதய நோய்கள் என 
எல்லாவற்றுக்கும் ஏதுவாக உடல் 
பலவீனமடையும். நோயற்ற வாழ்க்கைக்கு 
ஆன்ட்டிஆக்சிடண்ட்ஸ் அவசியம். வைட்டமின் 
ஏ (பீட்டா கரோட்டின்), சி, இ போன்ற சத்துகளை 
எக்கச்சக்கமாக உள்ளடக்கியது இது. குறிப்பாக 
நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியமான 
தேவையான வைட்டமின் சியை அபரிமிதமாகக் 
கொண்டது சுண்டைக்காய். ஆரஞ்சு, கொய்யா, 
பப்பாளிக்கு இணையான வைட்டமின் சி இதில் 
உண்டு.

* ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. 
ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் 
குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி 
இதற்கு உண்டு. ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி 
குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த 
அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக 
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. 
சுண்டைக்காயில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த 
சோகையை எதிர்த்துப் போராடக் கூடியது. 
இரும்புச் சத்து என்றதும் கேழ்வரகு, கீரை 
போன்றவற்றையே நாடுவோர்க்கு, அது 
சுண்டைக்காயில் அதிகளவில் உள்ளது 
தெரியாது.

* சுண்டைக்காயை பச்சையாகவோ, 
வற்றலாகவோ எப்படி வேண்டுமானாலும் 
சாப்பிடலாம். காய்ச்சல் நேரத்தில் 
சுண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் 
வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிப்பதுடன், 
காயங்களும் புண்களும் கூட ஆறும்.

* தையாமின், ரிபோஃப்ளேவின், நியாசின் 
போன்ற பி காம்ப்ளக்ஸ் சத்துகள் அனைத்தும் 
இதில் உள்ளன. இதில் உள்ள ரிபோஃப்ளேவின்
வாய் புண்களையும், சொத்தைப் பல் உருவாவ 
தையும் தடுக்கக் கூடியது.

* நரம்பு மண்டலத்துக்கு சக்தி 
கொடுக்கக்கூடியது 
சுண்டைக்காய். பார்வைத் திறன் அதிகரிக்கவும் 
நினைவாற்றல் கூடவும் சுண்டைக்காயில் உள்ள 
நல்ல குணங்கள் உதவக்கூடியவை.

* நம்மூர் மக்களுக்கு சுண்டைக்காய் வற்றலைத் 
தவிர அதை எப்படி உபயோகிப்பது என்பது 
தெரியாது. ஆனால், சுண்டைக்காயை விதம் 
விதமாக சமைத்து உண்ணலாம். கத்தரிக்காயை 
என்னவெல்லாம் செய்து சாப்பிடுவோமோ, 
அத்தனையையும் சுண்டைக்காயிலும் 
செய்யலாம். கேரட், பீட்ரூட் மாதிரி பிரமாதமான 
சுவை கொண்டதல்ல இது. சப்பென்றுதான் 
இருக்கும். ஆனால், அதை நாம் சமைக்கிற 
முறையின் மூலம் சுவை மிக்கதாக மாற்ற 
முடியும்.

* சித்த மருத்துவத்தில் சுண்டைக்காயின் பயன் 
பாடு மிக அதிகம். அதன் சாரத்தை அவர்கள் பல 
மருந்துத் தயாரிப்புகளுக்கு 
உபயோகிக்கிறார்கள்.

* பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் 
ஒரு பகுதியாக அங்காயப் பொடி என ஒன்று 
கொடுப்பார்கள். அதில் பிரதானமாக 
சேர்க்கப்படுவதே சுண்டைக்காய்தான். 
தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான 
சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை 
வெளியேற்றும் சக்தி கொண்டது அதில் 
சேர்க்கப்படுகிற சுண்டைக்காய். 
“சுண்டைக்காயா... அதை வச்சு என்ன செய்ய 
என ஒதுங்கிப் போகாமல் இனிமேல் எப்போது, 
எங்கே சுண்டைக்காயைப் பார்த்தாலும் உடனே வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்” .சுண்டைக்காய் 
எவ்வாறு விவத விதமாக சமைப்து குறித்து 
கேளே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள் .

http://samaiyals.blogspot.in/2015/07/blog-post_34.html

முடி கொட்டுவது நிற்க




முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்

தலை முடி கருப்பாக வேண்டும், முடி 
கொட்டக்கூடாது, முடி வளர வேண்டும் என்று 
கவலையுடன் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் 
கை கொடுக்கும்.
சரக்கு வகை

சுத்தமான தேங்காய் எண்ணெய் - 1 போத்தல்
சுத்தமான நல்லெண்ணெய் - 1 போத்தல்
சடாமஞ்சில் - 50 கிராம்
கருஞ்சீரகம் - 50 கிராம்
பொடுதலை நன்கு காய்ந்தது - 50 கிராம்
முறை
இவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு காய்ச்சி இரு 
வாரம் சரக்குகளை ஊரப்போட்டு பின்னர் வடித்து 
எடுத்து பயன்படுத்தலாம்

* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை 
தடவினால் முடி வளரும்

* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து 
அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து 
வர முடி உதிர்தல் நிற்க்கும்.

* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் 
எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது 
அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் 
தலையும் குளிர்ச்சியாகும்.

* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து 
தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் 
முடி 
உதிராது.

* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் 
கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது 
அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

* முட்டை வெள்ளை கருவை தலையில் 
தேய்த்து 
10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு 
குளித்தால் 
தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
இரும்புச்சத்து பற்றாக்குறை முடி 
கொட்டுவதற்கு 
முக்கிய காரணமாக இருக்கிறது.போதுமான 
அளவு ஹீமோகுளோபின் இல்லாவிட்டால் 
உடல்நலம் கடுமையாக 
பாதிக்கப்படும்.பேரீச்சம்பழம்,அசைவ 
உணவுகள்,வெல்லம்,முருங்கைக்கீரை 
போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் 
இருக்கிறது.

இச்சத்து உடலில் சேர உணவு உண்ட ஒருமணி 
நேரத்திற்காவது காபி,தேநீர் 
தவிர்க்கலாம்.எலுமிச்சை,நெல்லி,ஆரஞ்சு 
போன்ற சி வைட்டமின் கொண்டவை 
இரும்புச்சத்து உடலில் கிரகிக்க 
அவசியம்.போதுமான 
வைட்டமின்கள்,தாதுக்கள்,புரதங்கள் சேர்க்காத 
நிலையில் ஏற்படும்.உயிர்ச்சத்து அதிகமுடைய 
பழங்கள்,காய்கறிகளை சேர்ப்பது,போதுமான 
அளவு நீர் அருந்துவது,எட்டுமணி நேர தூக்கம் 
போன்றவை முடிக்கு மட்டுமல்லாமல் ஒட்டு 
மொத்த ஆரோக்கியத்தை காக்கும்.

* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை 
அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் 
ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து 
மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி 
கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல 
இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். 
கருகருவென முடி வளரத் தொடங்கும்....

சனி, 25 ஜூலை, 2015

கண் பார்வை from எள்ளுப் பூக்கள்..!





கண் பார்வையை தெளிவாக்கும் எள்ளுப் 

பூக்கள்..!

உடலுக்கு சக்தி தரும் எள் போல 

எள்ளுச்செடியின் மலர்களும் மருத்துவ குணம் 

கொண்டுள்ளது.

தூய வெண்மை நிறம் கொண்ட எள்ளுப்பூக்கள் 

அழகிய வடிவம் கொண்டவை. சங்க காலம் 

முதல் தற்கால கவிஞர்கள் வரை 

எள்ளுப்பூக்களை பெண்களின் நாசிக்கு 

ஒப்பிடுகின்றனர். எள்ளுச்செடிகளில் புதிதாக 

பூக்கும் பூக்களை தினமும் பறித்து பச்சையாக 

சாப்பிட்டு மோர் பருகிவர கண் தொடர்பான 

நோய்கள் நீங்கும்.


மங்கலான பார்வை தெளிவடையும்

எள் செடியில் இருந்து பூவைப் பறித்து பற்களில்

படாமல் விழுங்கிவிட வேண்டும்.

ஒவ்வொன்றாக விழுங்க முயற்சி செய்ய

வேண்டும். மொத்தமாக அள்ளிப் போடக்கூடாது.

ஒரே நேரத்தில் ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக

எத்தனை பூக்கள் விழுங்குகிறோமோ அத்தனை

வருடங்களுக்கு கண் வலி வராது. மங்கலான

பார்வை தெளிவடையும்.

கண்களில் பூ விழுந்தவர்களுக்கு

பேரிச்சம்பழக்கொட்டையும், மான் கொம்பின்

ஒரு பகுதியையும், தாய்பாலில் இழைத்து

அத்துடன் எள் பூவையும் கசக்கி இழைத்து

சேர்த்து கண்களில் மை போல போட்டு வர, பூ

விழுந்ததால் பார்வைக்குறைவு வந்தவர்கள்

குணம் பெறுவார்கள்.

கண் எரிச்சல், கண் பார்வை மந்தம் உள்ளவர்கள்


கைப்பிடியளவு எள்ளுப்பூவை ஒரு சட்டியில்

போட்டு பதமாக வதக்கி சூடு ஆறியதும், கண்கள்

மீது வைத்துக் கட்டி விட வேண்டும். இதைப்

படுக்கப் போகும் போது செய்யவும். காலையில்

அவிழ்த்து விட வேண்டும். குணம் கிடைக்கும்

வரை இதனை தொடர்ந்து செய்யவும்.

எள்ளுப்பூக்களில் இருந்து எடுக்கப்பட்ட தேன்

உடலுக்கு பலத்தை தரும்.

சர்க்கரை நோயை விரட்ட





ஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட 
 வேண்டுமா? 
*
*********************************************************************
**********
சர்க்கரை நோய் உங்களை விட்டு ஒரு மாதத்தில் 
ஓடிவிட எளிய ஆனால் உடனே பலன் தரக்கூடிய 
வழி இதோ...
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி 
வேண்டாம். முயற்சி செய்து பாருங்கள்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
வரக்கொத்தமல்லி (தனியா) - அரை கிலோ
வெந்தயம் - கால் கிலோ

தனித்தனியா மேற்கண்டவற்றை வெறும் கடாயில் 
பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி 
செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் 
(இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு 
டம்ளராக சுண்டக் காய்ச்சவும்.

பின்பு வடிகட்டி கட்டவும். தினமும் மூன்று வேலை 
சாப்பாட்டிற்கு முக்கால் மணி நேரத்திற்கு முன்பாக 
சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி 
நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) 
உண்ணக்கூடாது.
இதை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் 
சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.

சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு 
வார
இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் 
முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனை செய்து 
கொள்ளுங்கள்.

வெள்ளி, 24 ஜூலை, 2015

தூங்கும் முறை


தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் 

உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் 

நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் 

என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. 

பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் 

குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் 

தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.


இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன 

தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் 

ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்


கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ்

சிலரை


நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ்

சிலரை


நம்பிக் காண் .

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி

மயக்கம், தெளிவின்மை,

ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,


பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை,

மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்

என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக்

கூறியுள்ளனர்.

.

உத்தமம் கிழக்கு

ஓங்குயிர் தெற்கு

மத்திமம் மேற்கு

மரணம் வடக்கு
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது

மிகவும் நல்லது.

தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால்

ஆயுள் வளரும்.

மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால்

கனவு, அதிர்ச்சி உண்டாகும்.

வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து

தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும்

ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில்

இருந்து வரும் காந்தசக்தி

தலையில் மோதும் போது அங்குள்ள பிராண

சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப்

படுவதுடன்,


இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி

உண்டாகும். மேலும் மல்லாந்து

கால்களையும்,கைகளையும்


அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.

இதனால் இவர்களுக்குத் தேவையான

ஆக்ஸிஜன்

(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல்

குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது,

தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும்,

வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை
நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து

தூங்க

வேண்டும்.

இதனால் வலது மூக்கில் சுவாசம்

சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம்

மட்டுமே சுவாசம்

வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும்.

மேலும் இதனால் உடலுக்குத் தேவையான

வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை

அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில்

சீரணமாகும்.

இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து

இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது

பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம்

ஓடும்.

இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம்

வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி

உண்டாகும்.

இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப்

போய் விஷமாக நேரிடும்

சித்தர்கள் கூறியது அனைத்துமே நம்

அனைவரின் நன்மைக்கே, இதை நாமும்

பின்பற்றி பயன் பெருவோம்.

ஞாயிறு, 19 ஜூலை, 2015

மூல நோய் Cure in simple ways !!!


மூல நோய் Curing simple ways !!!
ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் 
வீங்கிப்பருத்து வெளிவரு வதைத்தான் 
மூலநோய் என்கிறார்கள்.

மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகும்போது, மலம் 
வெளியேறாமல் உள்ளுக் குள்ளேயே நின்று 
இறுக்குகிறது. முக்கி வெளியேற்ற 
முற்படும்போது மலவாய்க் குடலில் இருந்து 
சிரைகள் பாதிக்கப்பட்டு வெளியே 
தள்ளிக்கொண்டு வந்து விடுகின்றன.


தவிர, காய்ந்த மலம் ஆசனவாயைக் 
கிழிப்பதால் 
ரத்தம் பீறிட்டு வெளியே வரும். ஒவ்வொரு 
நாளும் இதே மாதிரி மலம் கழிக்கும்போது அந்த 
வாய்ப் பிளந்து கொள்ளும். இதை பிஸ்ஸர் 
அல்லது ஆசனவாய் வெடிப்பு என்கிறார்கள்.

இது புண்ணாகி நாளடைவில் சீழ் மூலம் 
அல்லது பவுத்திரமாக மாறும். இவ்வாறே நவ 
மூலங்கள் உண்டாகின்றன.

ஆங்கில வைத்தியத்தில் இதை முதல் டிகிரி, 
இரண்டாவது டிகிரி, மூன்றாவது மற்றும் 
நான்காவது டிகிரி என நான்கு வகைகளாகப் 
பிரிப்பார்கள். ஆனால் நமது தமிழ் 
முன்னோர்கள் 
இதை இருபத்தோரு வகைகளாகப் பிரித்தார்கள்.
அவை:

நீர் மூலம், செண்டு மூலம், முளை மூலம், சிற்று 
மூலம், வரண் மூலம், ரத்த மூலம், 
வினைமூலம், 
மேக மூலம், பௌத்திர மூலம், கிரந்திமூலம், 
சூத 
மூலம், புற மூலம், சீழ் மூலம், ஆழி மூலம், 
தமரக மூலம், வாத மூலம், பித்த மூலம், 
சிலேத்தும மூலம், தொந்த மூலம் மற்றும் கவ்வு 
மூலம்.

இதில் ஒன்பது வகைகள் மிகக் கடுமையானவை 
என்பதால் இவற்றை நவமூலம் என்றும் 
சொன்னார்கள்.

நமது மூதாதையரான சித்தர்கள் மூல நோயை 
குணப்படுத்தும் பல அரிய மூலிகைகளை 
ஓலைச் சுவடிகளில் விட்டுச் சென்றுள்ளார்கள்.

அதனடிப்படையில் மூலநோய்க்கு 
பிரத்யேகமான மூலிகை மருந்துகள் 
தயாரிக்கப்பட்டு அளிக்கும்போது பக்க 
விளைவுகள் இல்லாமல் மூலநோய் குணமாகும்.

ஒரு மண்டலம் சாப்பிடும் மருந்துகளும் 
உள்ளன, ஒரே வாரத்தில் குணமாகும் 
மருந்துகளும் சித்த மருத்துவத்தில் 
சொல்லப்பட்டுள்ளன.

இதனால் உள் மூலம் குணமாகும், வெளிமூலம் 
சுருங்குகிறது. ஆசனவாயில் இருக்கும் 
சீழ்க்கட்டிகள் உடைந்து ஆற்றப்படுகின்றன. மல 
ஜலம் சுலபமான முறையில் வெளியேறுகிறது. 
மீண்டும் வருவதில்லை.

உதாரணத்திற்கு ஒரு மூலிகையைப் பற்றி 
தெரிந்துகொள்ளுங்கள்.

துத்திக் கீரை என்ற ஒன்றை 
கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த துத்திக் கீரையை 
தினந்தோறும் சமையலில் சாப்பிட்டு வந்தால் 
மூலநோய் தலைக் காட்டாது. எத்தகைய 
மூலக்கட்டிகள் வந்தாலும் துத்தி இலைமீது 
விளக்கெண்ணெய் தடவி, அனலில் காட்டி 
மூலக்கட்டியின் மீது வைத்துக் கட்டிவிட, கட்டி 
உடைந்துவிடும். மூல முனைகள் உள்ளுக்குச் 
சென்றுவிடும். வேண்டுமானால் நீங்கள் கூட 
செய்து பார்க்கலாம்.

துத்திக்கீரயின் மற்ற பயன்கள்:

இதன் இலை, பூ, வேர், பட்டை என அனைத்துப் 
பகுதிகளும் மருத்துவக் குணம் கொண்டவை.
மூலநோய் கட்டி முளைபுழுப்புண் ணும்போகுஞ் 
சாலவதக் கிக்கட்டத் தையலே - மேலுமதை 
எப்படியேனும் புகிச்ச எப்பிணியும் சாந்தமுறும் 
இப்படியிற் றுத்தி யிலையை (அகத்தியர் 
குணபாடம்)
மலச்சிக்கல் தீர
மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் 
கேடாகும். மலச்சிக்கலை நீக்கினால் நோயின்றி 
நூறாண்டு வாழலாம். இன்றைய நவீன 
உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் 
அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் 
மலச்சிக்கல் உருவாகின்றது. மனச் சிக்கல் 
இருந்தால் கூடவே மலச்சிக்கல் வந்துவிடும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை 
நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் 
பாசிப்பருப்பு 
சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது 
நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் 
தீரும்.
மூல வியாதி குணமாக
காரமும், புளிப்பும் உணவில் அதிகம் 
சேர்ப்பதால் 
சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு 
வாய்வுக்கள் 
சீற்றமாகி மூலக் குடலை அடைக்கிறது. 
இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூலநோயாக 
மாறுகிறது.
இவ்வாறு மூல நோயால் அவதிப்படுபவர்கள் 
துத்திக் கீரையை நீர்விட்டு அலசி சிறிது சிறிதாக 
நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன 
வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் 
இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு 
வந்தால் மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள் 
குறைந்து மூலநோய் படிப்படியாகக் குணமாகும்.
உடல் சூடு தணிய

துத்திக் கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக 
நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். 
நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன 
வெங்காயம், பூண்டு, மிளகு, தேவையான அளவு 
உப்பு சேர்த்து இரசமாக அருந்தி வந்தால் உடல் 
சூடு தணியும்.

வெப்பக்கட்டி குணமாக
துத்தியிலையை எடுத்து ஆமணக்கு 
(விளக்கெண்ணெய்) எண்ணெய் தடவி வதக்கி 
வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி 
வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும்.

துத்தியிலையை சாறெடுத்து, பச்சரிசி மாவுடன் 
சேர்த்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி 
வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.
பல்ஈறு நோய் குணமாக

துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க 
வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து 
வந்தால் 
பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.

குடல் புண் ஆற
துத்திக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் 
சேர்த்து வந்தால் குடல் புண் ஆறும்.

சிறுநீர் பெருக்கி

சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக 
நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை 
இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு 
பிரியும். 
சிறுநீரக நோய் வராது.

துத்திக் கீரையை கிடைக்கும் காலங்களில் 
வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் 
ஆரோக்கியத்தோடு வாழலாம்.

மூல நோய் விரட்ட02
எல்லாவகை மூல நோய்களுக்கும் பக்குவமான 
மருந்து இது. கிராமங்களில் கிடைக்கும் 
மருந்து.அதுதான் வேப்பமுத்து. அதன் பருப்பை 
நன்றாக அரைக்க வேண்டும். ஒரு பாக்கின் 
அளவு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட 
வேண்டும். மாலையிலும் ஒரு பாக்கு அளவு 
அரைத்து உருட்டிச் சாப்பிட வேண்டும். 
இப்படியே 
(ஒரு மண்டலம்) நாப்பத்தெட்டு நாள் 
சாப்பிடணும். பத்தியம் உண்டு. அதாவது,மூல 
வியாதிக்கு மருந்து சாப்பிட்டு முடியும் 
வரை,உடல் உறவு கூடாது.சூடு உண்டாக்கி 
மூலம் அதிகமாகும். அருகம்புல் சாறு 
நல்லது.நாள்தோறும் அதிகாலையில் 
அரைக்கால் படிசாறு குடித்து வமவுனம் என்னும் 
மந்திரமொழி

சனி, 11 ஜூலை, 2015

varicose veins


"வெரிகோஸ் வெயின்" (varicose veins) 

பிரச்னைக்கு தீர்வு

*

*

நீண்ட நேரம் நின்று பணி புரியும் 

பெரும்பாலானவர்களுக்கு "வெரிகோஸ் 

வெயின்" என்கிற நோய் வர அதிக வாய்ப்புண்டு. 

*

அது போல பலருக்கு கால் தொடைக்கு 

கீழ்ப்பகுதியிலோ, முட்டிக்காலுக்கு 

பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் 

கொண்டதைப் போல இருப்பதைப் 

பார்த்திருப்பீர்கள்.

*

முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய 

நரம்புமுடிச்சுகள் இருக்கும். இதற்கு தீர்வு உண்டு

*

சைப்ரஸ் எண்ணெயை தினந்தோறும் 

தடவிக்கொண்டு வந்தால் பலன் கிடைக்கும். 

இந்த சைப்ரஸ் எண்ணெய் வண்டலூர் 

உயிரியியல் பூங்காவினுள் உள்ள தமிழ்நாடு 

வனத்துறையின் விற்பனை அங்காடியில் 

கிடைக்கும்.

*
*
நிரந்தர தீர்வு காண அத்திக்காயில் இருந்து 

வெளி வரும் பாலை எடுத்து கால் மூட்டு 

பகுதியில் நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் 

தடவ வேண்டும். தினமும் 2 மணி நேரம் மருந்து 

பூச்சு இருக்கட்டும். அதன் பின் வெண்ணீரால் 

கழுவலாம். காலை நேரம் உகந்தது என்றாலும் 

உங்கள் வேலை நேரத்திற்கு தக்கபடி தினமும் 

பூசுங்கள். முழுமையான குணம் கிடைக்கும் 

எந்த சந்தேகமும் வேண்டாம். (அத்திக்காய் பால் 

தடவும் இடங்களில் புண் ஏற்பட்டால் கஸ்தூரி 

மஞ்சள் பூசலாம்)

*
முதல் 9 நாட்களுக்குள் வலி குறைந்து விடும்,
*

முக்கிய குறிப்பு:- பரோட்டா, மஸ்கத் அல்வா, 

ஊறுகாய், அப்பளம், ஐஸ்கீரிம் மற்றும் அசைவ 

உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

*
ஃபிரிட்ஜ் ல் இருந்து எடுக்கும் குளிந்த நீர் அருந்த 

வேண்டாம்.

*

48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
*
*
*
நன்றி:- மூலிகை மர்மங்கள்.