சனி, 29 ஆகஸ்ட், 2015

தேள் , தேனீ செய்யான் விஷம் தான் BP சுகர் Cancer மருந்துகள்

தேள் , தேனீ செய்யான் விஷம் தான் BP சுகர் 
Cancer ஆங்கில மருந்துகள்   

தெரியுமா...?

ஒரு மனிதனை தேள்கடித்து பின் வயித்தியம் 

பார்த்து விட்டால் அவர்களுக்கு வாழ்நாள் 

முழுதும் இதய அறுவை சிகிச்சையோ 

ஆஞ்சியோபிளாஸட்டோ தேவையில்லை தேள் 

கடித்தவர்க்கு மார்க்கட்டீன் என்ற விஷம் இதய 

இரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுத்து 

இதய நோய் வராமல் தடுக்கிறது


தேனீ கொட்டியவருக்கு இரத்த கொதிப்பு வராது


செய்யான் கடித்தவர்களுக்கு சர்க்கரை நோய் 
வராது


சங்குழவி கடித்தவர்க்கு கேன்சர் வராது 

இவைகளின் விஷம் ஆங்கில மருத்து வத்தில் 
தடுப்பு மருந்தாக பயனாகிறது

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

மார்புச்சளிக்கு ஏலப்பொடி



மார்புச்சளிக்கு ஏலப்பொடி

தலை சுற்றல் குணமாக:

சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை, மாலை அரை கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும்.

இருமல் குணமாக:

ஜலதோஷம், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

வறட்டு இருமல் குணமாக:

கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும். வெள்ளை முதலான நோய்களும் குணமாகும்.

ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக:

முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாகும்.

சளிகட்டு நீங்க:

தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை, கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு, சளிகட்டு நீங்கும்.

தலைபாரம் குறைய:

நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

மார்புச்சளி நீங்க:

ஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச்சளி குணமாகும்.

மூக்கடைப்பு நீங்க:

ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கி விடும்.

ஜலதோஷம் குணமாக:

முருங்கை பிஞ்சுகளை நசுக்கி சாறெடுத்து அதில் தேன் கலந்து 2 வேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட குணமாகும்.

வாந்தி நிற்க:

துளசி சாறு, கல்கண்டு சேர்த்து காய்ச்சலின் போது கொடுக்க வாந்தி நிற்கும்.

குமட்டல்:

கசப்பான மருந்து உட்கொண்டவுடன் வெற்றிலை காம்பை வாயிலிட்டு சுவைத்தால் குமட்டல் இருக்காது.

பித்தத்திலிருந்து விடுதலை பெற....!



பித்தத்திலிருந்து விடுதலை பெற....!

விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் பேன்றவற்றைப் பார்த்தால் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற அச்சம். அதிகம் சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ்சு கறிக்குமா எதுக்கிக்கெண்டே இருக்குமா இதுபேன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம். இந்த பித்தம் தெடர்பான பிரச்சினைகளையும், அதனை பேக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் இப்போது பார்ப்பேம்...

* இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

* இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

* பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

* எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.

* ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.

* பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.

* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

* அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

* பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

* கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

* நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.

* எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.

* அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால்


கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் - இயற்கை மருத்துவம்

பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. மேலும் கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை

கொழுப்புக்கள் கரையும் :-

காலையில் வெறும் வயிற்றில் சில கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

இரத்த சோகை :-

இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

சர்க்கரை நோய் :-

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

இதய நோய் :-

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

செரிமானம் :-

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

முடி வளர்ச்சி :-

கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

சளித் தேக்கம் :-

சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

கல்லீரல் பாதிப்பு நீங்கும் :-

கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.

சனி, 22 ஆகஸ்ட், 2015

முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி?




வீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி?

1. தேங்காய் எண்ணெய் - 1.5 லிட்டர். (செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் என்றால் சிறப்பு. கடையில் வாங்கும் புட்டி எண்ணெய்களில், தேங்காய்க்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ரசாயன எண்ணெய் இருக்கின்றனவாம்!)
2. வெள்ளைக் கரிசாலைச் சாறு - 0.5 லிட்டர்
3. கீழாநெல்லிச் சாறு - 0.5 லிட்டர்
4. அவுரி சாறு - 0.5 லிட்டர்
5. கறிவேப்பிலைச் சாறு - 0.5 லிட்டர்
6. பொடுதலைச் சாறு - 0.5 லிட்டர்
7. நெல்லிக்காய்ச் சாறு - 0.25 லிட்டர்
8. சோற்றுக் கற்றாழைச் சாறு - 0.25 லிட்டர்

(மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் கிராமப்புறங்களில் பரவலாகக் கிடைக்கும். அப்படிக் கிடைக்காத இடங்களில், நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.)

இலைச் சாறுகளைத் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இடித்தோ, மிக்ஸியில் அடித்தோ பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். நெல்லிக்காய் களில் கொட்டைகளை நீக்கிவிட வேண்டும். சோற்றுக் கற்றாழையில் அதன் உள்ளிருக்கும் ஜெல்லி போன்ற பகுதியை எடுத்து நன்கு கழுவிவிட்டு, பின்னர் அதில் இருந்து மட்டும் சாறு எடுக்கவும்.

இந்தச் சாறுகளின் கலவையைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மெல்லிய தீயில் எரித்து, நீர் வற்றி தைலம் பிரியும் தருவாயில் (அந்தச் சமயம் அடியில் தங்கியிருக்கும் கசடு மெழுகு போல இருக்கும்) பாத்திரத்தை இறக்கி வடித்துக்கொள்ளவும்.

இது மருந்து கிடையாது. அதனால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இந்தத் தைலம் குறைந்தபட்சம் 4-5 மணி நேரம் தலையில் ஊற வேண்டும். (10, 15 சொட்டுகள் தேய்த்தால் போதும்.) அதன் பிறகே தலைக்குக் குளிக்க வேண்டும். பலர் நினைப்பது போல செயற்கை கண்டிஷனர்கள் அசகாயப் பொருள் அல்ல. செயற்கை எண்ணெய் ப்ளஸ் ரசாயனங்களின் கலவைதான். எண்ணெய் தேய்க்காத தலைமுடி கண்டிப்பாக உதிரும் என்பது நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

சக்கரை நோய்க்கு சிறந்த மருந்து




சக்கரை நோய்க்கு மிக சிறந்த மருந்து...!

►440இல் இருந்த சக்கரை அளவு 30தே நாளில் 240 ஆக ஆன அதிசயம். அவசியம் படிச்சி பார்த்துட்டு கண்டிப்பா செய்தும் பாருங்க

எனக்கு தெரிந்த உறவினர் ஒருவருக்கு ஏழு வருடங்களாக சக்கரை நோய் இருந்தது. உண்மையில் சக்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல. நமது உடலில் சக்கரையின் அளவு அதிகமானால் வரும் பாதிப்பு. சக்கரையின் அளவை சரி செய்தால் போதும்.

அதன் அந்த அளவை எப்படி சரி செய்வது. எவ்ளோ இன்சுலின் , எவ்ளோ மாத்திரைகள். எத்தினை ஆயிரங்கள், லக்ஷங்கள் மருந்திற்கு என்று செலவு செய்வது. சரி ஆகவே மாட்டேங்கர்தே. இதற்க்கு ஒரு தீர்வே இல்லையா.??? இருக்கிறது

எனக்கு தெரிந்தவருக்கு இருந்த சுகர் எவ்ளோ தெரியுமா. கேட்டால் ஷாக் ஆய்டுவீங்க. 440. ஒரே மாதத்தில் அது 240 ஆக ஆனது. எப்படி.!!?

எங்களது ஒரு குடும்ப நண்பரின் ஆலோசனைப்படி நிலவேம்பு என்னும் மூலிகையை அவர் தினமும் சாப்பிட்டு வந்தாங்க. அவருக்கு பலனாக சக்கரை வியாதி பூர்ணமாக குணம் அடைந்து விட்டது.

நிலவேம்பு வெறும் உடலில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துவதை மட்டும் செய்வதில்லை. உடல் வலிமை, குடல் பூச்சிகள் அழிய, டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற அனைத்து கொடிய வியாதிகளையும் தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி நிலவேம்பு. டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவிய சமயத்தில், அதற்க்கு நிலவேம்பு மிக சிறந்த மருந்து என்று தமிழக அரசாங்கமே அறிவிப்பு வெளியிட்டது உங்களில் சிலருக்கு நியாபகம் இருக்கலாம்.

இதை எவ்வாறு பயன் படுத்துவது- இவற்றோடு கொத்தமல்லி, கிச்சலி தோல் எல்லாம் சேர்க்க வேண்டும் என்று சிலர் சொல்வார்கள். அது தேவையில்லை. விருப்பபட்டால் சேர்க்கலாம். இரண்டு டம்ப்ளர் நீரில் அதிக பக்சம் 10, 15 கிராம் நிலவேம்பு போட வேண்டும். 15 கிராம்க்கு மேல் போட்டால் ஓவர் டோஸ். அவர், அவர் வயது, உடல் வாகிற்கு தகுந்தார் போல் டோஸேஜ் கொஞ்சும் கூடலாம், குறையலாம். ஆனால் டோஸேஜ் குறைந்தால் கூட பிரச்சனை இல்லை. அதிகரித்தால் ஆபத்து. பத்து கிராம் என்பது சிறுவர், பெரியவர் அனைவருக்கும் ஏற்று கொள்ளும் சரியான டோஸேஜ். வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்கள் சக்கரையின் அளவை சோதனை செய்யுங்கள். அதற்க்கு தகுந்தார் போல் நீங்கள் டோஸேஜ்ஜை அதிகரித்து கொள்ளலாம். ஆனால் அதிக பக்சம் 15 கிராம் தான். வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள வேண்டும்

இத்தகைய சிறப்பு வாய்ந்த நிலவேம்பின் ஆரம்ப விலை எவ்ளவு தெரியுமா. வெறும் 55 ரூபாய். சில நாட்டு மருந்து கடைகளில் இதை விட விலை குறைவாகவும் கிடைக்கலாம், கூடவும் கிடைக்கலாம்.

பின் குறிப்பு:-

உடல் ஆரோக்கியத்திற்கு இனிப்பாக இருக்கும் பெரும்பாலானவை நாவிற்க்கு கசப்பாகவே இருக்கும். நிலவேம்பும் அதற்க்கு விதி விலக்கல்ல. நிலவேம்போடு தேனை சிறிது கலந்து குடித்தால் அது இனிப்பாகவும் இருக்கும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை சற்று கூட்டுவதாகவும் இருக்கும். தேனில் நிறைய ட்யூப்லிகேட் வருகிறது. காதியில் சுத்தமான மலை தேன் கிடைக்கும்.

சரி. சக்கரை வியாதி உள்ளவர்கள் நிலவேம்பில் தேன் கலந்து குடித்தால் சக்கரை வியாதி குணம் அடையுமா. என்னும் சந்தேகம் வரலாம். நிச்சயம் குணம் அடையும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை முறிக்கும் அளவு சக்தி தேனிர்க்கு இல்லை. என்ன ஒரு ரெண்டு, மூணு நாள் முன்ன, பின்ன ஆலாம். தினமும் இன்சுலின் போட்டு கொள்ளும் அவஸ்தைக்கு மூக்கை பிடித்தவாறே மடக்குனு ஒரு 30, 50 மில்லி நிலவேம்பு நீரை குடிப்பது கஷ்ட்டமாக இருக்காது. முதல் 30 நாள் கஷ்ட்டமாக இருக்கும். 31 ஆவது நாள். சக்கரை வியாதியே உங்களுக்கு இருக்காது.

Special Tips For Sugar Problem :

நூக்கல் 2 எடுத்து மிக்சியில் அரைத்து அதில் 5 ஆவாரம் பூக்களை அரைமணிநேரம் ஊரவைத்து குடிக்க வேண்டும்.

5 வெண்டைக்காய்களை எடுத்து துண்டு துண்டாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு இரவு ஊற வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும்.

சனி, 15 ஆகஸ்ட், 2015

மா-மரம் மருந்து




அடி முதல் நுணி வரை அதிசய மருந்துகளை தாங்கி நிற்க்கும் மா-மரம்.!
மாமரம் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, மரப்பட்டை, வேர், பிசின் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது.
மாந்தளிர்
நீரிழிவு உள்ளவர்கள், மாவின் கொழுந்து இலையை உலர்த்தி பொடி செய்து தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும். தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.
தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும். மாவிலைச் சாறுடன் தேன், பால் மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து அருந்தினால் ரத்தத்துடன் பேதியாவது நிற்கும். மாவிலையை மென்றுவந்தால் ஈறுகள் பலமாகும். மாவிலையின் நடுநரம்பை மைபோல் அரைத்து இமை மேல் வரும் பருக்கள் மீது தடவினால் அவை குணமாகும்.
மாம்பூ
உலர்ந்த பூக்களில் டானின் என்கிற சத்து உள்ளது. மாம்பூவைக் குடிநீரில் இட்டுக் குடித்தால் வயிற்றுப்போக்கு, சிறுநீரக நோய்கள், பால்வினை நோய்கள் ஆகியன குணமாகும். மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து தூளாக்கி அதனுடன் நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் போதும்.
மாம்பிஞ்சு
இளம் மாவடுக்களை எடுத்து காம்பு நீக்கி காயவைத்து, உப்பு நீரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வைத்துக்கொண்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டால், சீரண சக்தி அதிகரிக்கும். வாந்தி, குமட்டல் நீங்கும்.
மாங்காய்
பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவையும் ரத்த சோகையையும் நீக்கும் திறன் கொண்டது. பாத வெடிப்புகளுக்கு மாங்காயின் சாற்றைப் பூசினால் குணமாகும். காயின் தோலைக் கையளவு எடுத்து நெய்விட்டு வதக்கி, சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால் அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்படுவது நிற்கும். காயின் தோலை அரைத்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து மோருடன் கலந்து குடித்துவந்தால் ரத்த மூலமும் வயிற்றுப்போக்கும் தீரும்.
மாங்காயை சமைத்துச் சாப்பிடுவது நல்லது. அல்லது ஊறுகாய் செய்து சாப்பிடலாம். மாங்காய் அதிகம் சாப்பிட்டால், பசியின்மை, புண் ஆறாமை, பல் கூச்சம், சிரங்கு போன்றவை உண்டாகும்.
காம்பு
காம்பில் இருந்து வெளிப்படும் பால், படர்தாமரை மற்றும் சொறி சிரங்கு ஆகியவற்றைக் குணமாக்கும்.
மாம்பழம்
மாம்பழத்தில் வைட்டமின் 'ஏ’ சத்து அதிக அளவில் உள்ளது. மாம்பழம் மலச்சிக்கலைப் போக்கும். ரத்தத்தை விருத்தி செய்து கண் பார்வையைத் தெளிவாக்கும். விந்தணுக்களை அதிகப்படுத்தி, உடலை அழகுடன் திகழச் செய்யும்.
பருப்பு, கசகசா, சுக்கு, ஓமம் இவற்றுடன் பழச்சாறு விட்டு அரைத்து, நெய் சேர்த்துக் கொடுத்தால் கடுமையான வயிற்றுப்போக்கும் குணமாகும். மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும்.
இதனை கிடைக்கும் காலங்களில் அளவோடு சாப்பிட்டு வந்தால் சிறந்த பயனை அடையலாம்.
மாங்கொட்டை
பருப்பைப் பொன்னிறமாக வறுத்துத் தூளாக்கி உண்டால் வயிற்றுப்போக்கு, வெள்ளைப்படுதல், அதிகமான ரத்தப்பெருக்கு ஆகியன கட்டுப்படும். பருப்புப் பொடியை அரை ஸ்பூன் அளவு எடுத்து நீருடன் இரவில் உண்டு வந்தால் குடலில் உள்ள புழுக்கள் நீங்கும். வெட்டுக்காயம், தீக்காயம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பருப்பை அரைத்துப் பூசலாம். மாம்பருப்பை எடுத்து பொன்னிறமாக வறுத்து தூள் செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சரும எரிச்சல் நீங்கும்.
மாம்பிசின்
கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
தேமல், படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும்.
மா மரப்பட்டை
இதனுடன் கோரைக்கிழங்கு சேர்த்து அவித்துப் பிழிந்து அதிவிடயம் மற்றும் இலவங்கப் பிசின் சேர்த்துக் குடித்தால் வயிற்றுப்போக்குடன் கூடிய காய்ச்சல் நீங்கும். மாம்பட்டையை நல்லெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சிய எண்ணெயைப் பயன்படுத்தித் தலைக்குக் குளித்தால் மேக வியாதி, வெள்ளைப்படுதல், விஷக்கடியால் ஏற்படும் வலி ஆகியன குணமாகும். மரப்பட்டையை ஊறவைத்த குடிநீரைக் கொப்பளிக்கப் பல்வலி நீங்கும்.
இலையிலிருந்து வேர் வரை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் மாமரத்தை வீட்டிற்கு ஒரு மரமாவது நட்டு வளர்ப்போம்,

தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க



தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள் :-

1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

3. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

4. ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

5. பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

6. கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

7. வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

8. கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

9. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்

புதன், 12 ஆகஸ்ட், 2015

நெல்லிக்காய் ஜூஸ் Profits



நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன  நன்மை?
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் உணவுப் பொருட்களும், பழக்கவழக்கங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக உணவுப் பொருட்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை பெரிதும் உதவியாக உள்ளன. அவற்றில் ஒன்று தான் நெல்லிக்காய். பொதுவாக நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. அதனால் தான் ஆயுர்வேதத்தில் நெல்லிக்காயை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மேலும் நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும். இப்போது அந்த நெல்லிக்காய் ஜூஸை எப்படியெல்லாம் குடிக்க வேண்டும். அவ்வாறு குடிப்பதால், உடலுக்கு என்ன நன்மையெல்லாம் கிடைக்கும் என்பதனைப் பார்ப்போமா!!!
நீரிழிவு:
நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால், நல்லது.
உடல் எடை:
நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது குறையும்.
ஆஸ்துமா:
நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்.
மலச்சிக்கல்:
நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.
இரத்த சுத்திகரிப்பு:
நல்ல ஃப்ரஷ்ஷான நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சிறுநீர் எரிச்சல்:
சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகையஎரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.
உடல் குளிர்ச்சி:
கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் சிறந்ததாக இருக்கும்.
அதிகமான இரத்தப்போக்கு:
மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் போது, தினமும் மூன்று முறை சிறிது நெல்லிக்காய் ஜூஸையும், கனிந்த வாழைப்பழத்தையும் சாப்பிட்டால்,சரிசெய்துவிடலாம்.
அழகான முகம்:
முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.
இரத்தசோகை:
உடலில் இரத்தம் குறைவினால் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்க, தினமும் நெல்லிக்காய் சாற்றை குடித்தால், இரத்த சிவப்பணுக்களின்எண்ணிக்கை அதிகமாகி, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
இதய நோய்:
இதயம் பலவீனமாக இருப்பவர்கள், தினமும் நெல்லிக்காய் சாற்றை அளவாக குடித்து வந்தால், இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்யலாம்.
சரும பிரச்சனைகள்:
நெல்லிக்காய் ஜூஸ் சரும பிரச்சனைகளை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. குறிப்பாக முகப்பரு, பிம்பிள் உள்ளவர்கள், அதனை குடித்தால் போக்கிவிடலாம்.
கண் பார்வை:
நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், கண் பார்வை அதிகரிக்கும்.
முதுமைத் தோற்றம்:
நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, முதுமைத் தோற்றமானது விரைவில் வெளிப்படுவதை தடுக்கும்.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

என்ன இல்லை சோற்றுக்கற்றாழையில்!



என்ன இல்லை சோற்றுக்கற்றாழையில்!

சோற்றுக் கற்றாழைக்கு சித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது.

தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்ல கட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமலிருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.

கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.

சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும்.

கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.

மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.

விஷகடி நீங்க -சித்தமருத்துவம்





மனிதன், பாம்பு, தேள், பூரான்,நாய் கடி விஷம் நீங்க -சித்தமருத்துவம்

பெரும்பாலும் மனிதர்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ விசா வாங்காமலே மரணத்தை வாங்கித்தரும் பாம்பு ,நாய் , போன்ற நச்சு விஷங்களை நீக்குவது பற்றி நாம் காண்போம். பொரும்பாலும் இந்த நச்சு விஷங்களினால் உயிருக்கே கேட்டை தந்து விடுவது உண்டு , பல எலி போன்ற விஷங்கள் நாள்பட்ட நிலையில் அதன் குணத்தைக் காட்டும் . எலிக்கடியினால் பின்னாளில் மூச்சிறைப்பு என்ற நோய் தாக்குவதாக கண்டறியப்பட்டு உள்ளது . எனவே எந்த விஷமனாலும் . அவைற்றை முறைப்படி நீக்கி கொள்ள வேண்டும் .

நாய்க்கடி

நாய் கடித்த உடனே ஊமைத்தைவேர் 10 கிராம் எடுத்து வூமத்தன் விதை 10 கிராம் சேர்த்து பசுவின் பால்விட்டு அரைத்து நாள்தோறும் மூன்று நாள் கொடுக்கவும் .(அ )சிறியாநங்கை இலை 5 அ 10 எடுத்து உடனே மென்று தின்னவும் விடம் நீங்கும் . இரண்டு மூன்று நாட்களுக்கு கண்டதை எல்லாம் தின்னாமல் வெறுமனே கஞ்சி மட்டுமே உண்டுவர விஷம் நீங்கும் .

சீத மண்டலி

சீத மண்டலி கடித்தால் உடல் குளிரும் வியர்வை உண்டாகும் . உடலில் நடுக்கம் உண்டாகும்
குப்பை மேனி மூலிகை கொண்டுவந்து அரைத்து எலுமிச்சை விட்டரைத்து கடித்த இடத்தில் பூச வேண்டும் . சிறியாநங்கை மூலிகை பொடி கால் தேக்கரண்டி தேன் / தண்ணீர் கலந்து மூன்று நாள் காலை , மாலை உண்டுவர விஷம் முறியும் .

வண்டுகடி

ஆடு தீண்டா பலை வேர் நூறு கிராம் , பொடித்து ஐந்து கிராம் அளவு நாளும் இரண்டுவேளை எட்டுநாள் உண்ண விஷம் நீங்கும்.

செய்யான் விஷம்

தேங்காய் துருவி சாறு எடுத்து நூறு மிலி அருந்த விஷம் நீங்கும். எட்டி கொட்டை எடுத்து பால்விட்டரைத்து பாலில் அருந்த விஷம் முறியும்.

பூரான்

இது கடித்தால் தோலில் தினவு எடுக்கும் . பூரான்போல் தடிப்பு உண்டாகும். குப்பை மேனி சாறு பத்து மிலி கொடுத்து சுட்ட உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க விஷம் நீங்கும். சிரியாநங்கை மூலிகையின் சாறு அருந்தலாம் . அரைத்து ஐந்து கிராம் எடுக்கலாம் .விஷம் முறியும் .

விரியன் பாம்பு கடித்தால்

இதில் பல வகை உண்டு கருவிரியபாம்பு கடித்தால் சிவப்பு நிறமாக பொன்னிறமாக நீர் வடியும் . கடுப்பு உண்டாகும் . இதற்க்கு பழைய வரகு அரிசி இருநூருகிரம் கொண்டுவந்து பிரய்மரப்பட்டை இருநூருகிரம் தனித்தனியே இடித்து வெள்ளாட்டுப்பால் கலந்து மூன்று நாள் உப்பு புலி தள்ளி உண்ண விஷம் நீங்கும் .

நல்ல பாம்பு கடித்தால்

நேர்வாளம் பருப்பை சுண்ணம் செய்து வெற்றிலை பாக்கு போல் மென்று விழுங்க கக்கல் (வாந்தி)கழிச்சல் உண்டாகி விஷம் வெளியேறும். தும்பை சாறு 25 மிலி எடுத்து மிளகு பத்து கிராம் அரைத்து கொடுக்க விஷம் நீங்கும் வெள்ளருகு கொண்டுவந்து மென்று தின்ன விஷம் முறியும் .

தேள் கடித்தால்

தேள் கொட்டிய வுடன் தேங்காய் துருவி பால் எடுத்து இருநூறு மிலி அருந்த விஷம் முறியும். நிலாவரை தூள் ஐந்து கிராம் குப்பை மேனி சாற்றில் மூன்று வேலை அருந்த விஷம் முறியும் .

எலிக்கடிகள்

அமுக்ரா தூள் அரைத்தேக்கரண்டி இரண்டு வேலை நாற்பத்தெட்டு நாள் எடுக்க விஷம் முறியும் .
அவுரி மூலிகை பத்துகிராம் வெந்நீரில் கலக்கி ஒருவேளை மூன்று நாள் அருந்த விஷம் முறியும் .

மனிதன் கடித்தால் (அருள் கூர்ந்து சிரிக்க வேண்டாம் மனிதர்கள் மனிதனையே கடிக்கிறார்கள் )

சிருகுரிஞ்சன் ஒருகிராம் இரண்டு வேலை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும். சிவனார் வேம்பு ஒருகிராம் ஒருவேளை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்
சிரியா நங்கை அரைதேக்கரண்டி வீதம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும். பொன்னாவிரை கால் தேக்கரண்டி உணவுக்கு பின் ஒருவேளை வேதம் மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்.

இப்படி முறைப்படி மருந்துகளை எடுத்துகொண்டு எதிர் காலத்தில் தோன்றும் நோய்களை வென்று வாழ்வோம் . சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்!

ஞாயிறு, 26 ஜூலை, 2015

சுண்டைக்காய் மருத்துவம்!





சுண்டைக்காய் மருத்துவம்!

கிருமிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு 
நிகரே இல்லை எனலாம். உணவின் மூலம் நம் 
உடலுக்குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக 
உள்ளே பலவித பாதிப்புகளை உருவாக்கலாம். 
அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு 
இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது 
தவிர்க்கப்படும். சுண்டைக்காயை உலர்த்திப் 
பொடியாக்கி, தினம் சிறிதளவை தண்ணீரில் 
கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய் 
தொற்றும், அதன் விளைவால் உண்டாகிற 
அரிப்பும் குணமாகும். வாரத்தில் 4 நாட்களுக்கு 
சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு ரத்த 
சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்குமாம்.

சுண்டைக்காயைக் காய வைத்து வற்றலாக்கி, 
சில துளிகள் எண்ணெய் விட்டு வறுத்து, சூடான 
சாதத்தில் பொடித்துச் சேர்த்து ஒரு கவளம் 
சாப்பிட, அஜீரணக் கோளாறுகள் குணமாகும். 
வாயுப்பிடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கும் 
சுண்டைக்காய் நல்ல மருந்து. பச்சை 
சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் 
மூலம் எலும்புகள் பலப்படும் என்பது பெண்கள் 
கவனிக்க வேண்டிய சேதி. பக்கவாதம் 
பாதித்தவர்களுக்குக் கூட சுண்டைக்காய் 
மெல்ல மெல்ல நிவாரணம் தரும் என்கிறது 
பாட்டி வைத்தியக் குறிப்பு ஒன்று.

எப்படி சுத்தப்படுத்துவது?

காம்புடன் கூடிய பச்சை சுண்டைக்காய்களாகப் 
பார்த்து வாங்க வேண்டும். காம்பு நீக்கி, 
சுண்டைக்காய்களை லேசாகத் தட்டி, தண்ணீர் 
உள்ள பாத்திரத்தில் போட வேண்டும். பிறகு 
கைகளால் லேசாக அவற்றை அலசினால், 
விதைகள் அடியில் தங்கும். விதைகளை 
முழுக்க நீக்கத் தேவையில்லை. பிறகு 
இன்னொரு முறை காய்களைக் கழுவிவிட்டு, 
சமையலுக்கு உபயோகிக்கலாம்.

உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து, 
கொழுப்பைக் கரைப்பது வரை பெரிய பெரிய 
வேலைகளைச் செய்யக் கூடிய மாபெரும் 
மருத்துவக் குணங்களை உள்ளடக்கியது 
சின்னதான இந்த சுண்டைக்காய். இத்தனை 
சிறிய சுண்டைக்காயினுள் இவ்வளவு 
விஷயங்களா என மலைக்க வைக்கிறது, 
ஊட்டச்சத்து நிபுணரான ஹேமமாலினி 
சொல்கிற தகவல்கள்...

* நமது வீட்டுத் தோட்டங்களில் மிகச் 
சுலபமாகவும் சீக்கிரமாகவும் விளையக்கூடிய 
ஒரு தாவரம் சுண்டைச்செடி. மகத்தான 
மருத்துவக் குணங்கள் கொண்ட 
சுண்டைக்காயின் உபயோகம் மெல்ல மெல்ல 
குறைந்து வருகிறது. சுண்டைக்காயை நுண் 
ஊட்டச் சத்துகளின் பவர் ஹவுஸ் என்றே 
சொல்லலாம். தேவையற்ற செல் பாதிப்புகள் நம் 
உடலில் ஏகப்பட்டவியாதிகளை வரவழைத்து 
விடும். நீரிழிவு, இதய நோய்கள் என 
எல்லாவற்றுக்கும் ஏதுவாக உடல் 
பலவீனமடையும். நோயற்ற வாழ்க்கைக்கு 
ஆன்ட்டிஆக்சிடண்ட்ஸ் அவசியம். வைட்டமின் 
ஏ (பீட்டா கரோட்டின்), சி, இ போன்ற சத்துகளை 
எக்கச்சக்கமாக உள்ளடக்கியது இது. குறிப்பாக 
நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியமான 
தேவையான வைட்டமின் சியை அபரிமிதமாகக் 
கொண்டது சுண்டைக்காய். ஆரஞ்சு, கொய்யா, 
பப்பாளிக்கு இணையான வைட்டமின் சி இதில் 
உண்டு.

* ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. 
ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் 
குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி 
இதற்கு உண்டு. ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி 
குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த 
அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக 
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. 
சுண்டைக்காயில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த 
சோகையை எதிர்த்துப் போராடக் கூடியது. 
இரும்புச் சத்து என்றதும் கேழ்வரகு, கீரை 
போன்றவற்றையே நாடுவோர்க்கு, அது 
சுண்டைக்காயில் அதிகளவில் உள்ளது 
தெரியாது.

* சுண்டைக்காயை பச்சையாகவோ, 
வற்றலாகவோ எப்படி வேண்டுமானாலும் 
சாப்பிடலாம். காய்ச்சல் நேரத்தில் 
சுண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் 
வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிப்பதுடன், 
காயங்களும் புண்களும் கூட ஆறும்.

* தையாமின், ரிபோஃப்ளேவின், நியாசின் 
போன்ற பி காம்ப்ளக்ஸ் சத்துகள் அனைத்தும் 
இதில் உள்ளன. இதில் உள்ள ரிபோஃப்ளேவின்
வாய் புண்களையும், சொத்தைப் பல் உருவாவ 
தையும் தடுக்கக் கூடியது.

* நரம்பு மண்டலத்துக்கு சக்தி 
கொடுக்கக்கூடியது 
சுண்டைக்காய். பார்வைத் திறன் அதிகரிக்கவும் 
நினைவாற்றல் கூடவும் சுண்டைக்காயில் உள்ள 
நல்ல குணங்கள் உதவக்கூடியவை.

* நம்மூர் மக்களுக்கு சுண்டைக்காய் வற்றலைத் 
தவிர அதை எப்படி உபயோகிப்பது என்பது 
தெரியாது. ஆனால், சுண்டைக்காயை விதம் 
விதமாக சமைத்து உண்ணலாம். கத்தரிக்காயை 
என்னவெல்லாம் செய்து சாப்பிடுவோமோ, 
அத்தனையையும் சுண்டைக்காயிலும் 
செய்யலாம். கேரட், பீட்ரூட் மாதிரி பிரமாதமான 
சுவை கொண்டதல்ல இது. சப்பென்றுதான் 
இருக்கும். ஆனால், அதை நாம் சமைக்கிற 
முறையின் மூலம் சுவை மிக்கதாக மாற்ற 
முடியும்.

* சித்த மருத்துவத்தில் சுண்டைக்காயின் பயன் 
பாடு மிக அதிகம். அதன் சாரத்தை அவர்கள் பல 
மருந்துத் தயாரிப்புகளுக்கு 
உபயோகிக்கிறார்கள்.

* பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் 
ஒரு பகுதியாக அங்காயப் பொடி என ஒன்று 
கொடுப்பார்கள். அதில் பிரதானமாக 
சேர்க்கப்படுவதே சுண்டைக்காய்தான். 
தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான 
சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை 
வெளியேற்றும் சக்தி கொண்டது அதில் 
சேர்க்கப்படுகிற சுண்டைக்காய். 
“சுண்டைக்காயா... அதை வச்சு என்ன செய்ய 
என ஒதுங்கிப் போகாமல் இனிமேல் எப்போது, 
எங்கே சுண்டைக்காயைப் பார்த்தாலும் உடனே வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்” .சுண்டைக்காய் 
எவ்வாறு விவத விதமாக சமைப்து குறித்து 
கேளே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள் .

http://samaiyals.blogspot.in/2015/07/blog-post_34.html

முடி கொட்டுவது நிற்க




முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்

தலை முடி கருப்பாக வேண்டும், முடி 
கொட்டக்கூடாது, முடி வளர வேண்டும் என்று 
கவலையுடன் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் 
கை கொடுக்கும்.
சரக்கு வகை

சுத்தமான தேங்காய் எண்ணெய் - 1 போத்தல்
சுத்தமான நல்லெண்ணெய் - 1 போத்தல்
சடாமஞ்சில் - 50 கிராம்
கருஞ்சீரகம் - 50 கிராம்
பொடுதலை நன்கு காய்ந்தது - 50 கிராம்
முறை
இவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு காய்ச்சி இரு 
வாரம் சரக்குகளை ஊரப்போட்டு பின்னர் வடித்து 
எடுத்து பயன்படுத்தலாம்

* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை 
தடவினால் முடி வளரும்

* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து 
அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து 
வர முடி உதிர்தல் நிற்க்கும்.

* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் 
எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது 
அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் 
தலையும் குளிர்ச்சியாகும்.

* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து 
தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் 
முடி 
உதிராது.

* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் 
கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது 
அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

* முட்டை வெள்ளை கருவை தலையில் 
தேய்த்து 
10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு 
குளித்தால் 
தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
இரும்புச்சத்து பற்றாக்குறை முடி 
கொட்டுவதற்கு 
முக்கிய காரணமாக இருக்கிறது.போதுமான 
அளவு ஹீமோகுளோபின் இல்லாவிட்டால் 
உடல்நலம் கடுமையாக 
பாதிக்கப்படும்.பேரீச்சம்பழம்,அசைவ 
உணவுகள்,வெல்லம்,முருங்கைக்கீரை 
போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் 
இருக்கிறது.

இச்சத்து உடலில் சேர உணவு உண்ட ஒருமணி 
நேரத்திற்காவது காபி,தேநீர் 
தவிர்க்கலாம்.எலுமிச்சை,நெல்லி,ஆரஞ்சு 
போன்ற சி வைட்டமின் கொண்டவை 
இரும்புச்சத்து உடலில் கிரகிக்க 
அவசியம்.போதுமான 
வைட்டமின்கள்,தாதுக்கள்,புரதங்கள் சேர்க்காத 
நிலையில் ஏற்படும்.உயிர்ச்சத்து அதிகமுடைய 
பழங்கள்,காய்கறிகளை சேர்ப்பது,போதுமான 
அளவு நீர் அருந்துவது,எட்டுமணி நேர தூக்கம் 
போன்றவை முடிக்கு மட்டுமல்லாமல் ஒட்டு 
மொத்த ஆரோக்கியத்தை காக்கும்.

* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை 
அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் 
ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து 
மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி 
கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல 
இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். 
கருகருவென முடி வளரத் தொடங்கும்....